உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு அடிப்படை தத்துவமான மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கும் மக்களாட்சிக்கான வரையறையாக கருதப்படும் விளக்கம் சுமார் 155 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 19, 1863ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அந்நாட்டின் ‘கெட்டிஸ்பர்க்’ நகரில் நிகழ்த்திய உரை மூலம் வலியுறுத்தப்பட்டது.
உரையின் பின்னணி:
கருப்பின மக்களுக்கான நீதியை மீட்டெடுத்து அடிமை முறையை ஒழித்து, அமெரிக்க அதிபர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகுக்கே ஆதர்ஷமாக விளங்குபவர் லிங்கன். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து வாழ்வில் சோதனைகளையும் துயரங்களையும் மனம் தளராமல் கடந்த உலகின் பழமை வாய்ந்த ஜனநாயக நாட்டின் அதிபராக உச்சம் தொட்டவர் ஆபிரகாம் லிங்கன்.
அமெரிக்காவின் 16வது அதிபராக லிங்கன் பதவி வகித்த காலத்தில்தான் அங்கு, கருப்பின மக்கள் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் போரில் ஈடுபடத் தொடங்கினர். 4 ஆண்டுகளுக்கு மேல் நடந்த போரில் தன் மகன், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் இழந்தபோதும் சளைக்காமல் உழைத்து உள்நாட்டு போருக்குதீர்வு கண்டார் லிங்கன்.
அது மட்டுமின்றி, அமெரிக்க பார்லிமென்ட்டில் 13 வது சட்ட திருத்தத்தின் மூலம் கருப்பின மக்களின் அடிமை நிலையை ஒழித்து புதிய சகாப்தத்தை தொடங்கியவர் லிங்கன். இந்த போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நிகழ்சி கெட்டிஸ்பர்க் நகரில் நடந்தத. அந்த நிகழ்ச்சியில் தான் உலகப்புகழ் பெற்ற அவரது உரையும் மக்களாட்சியின் தத்துவமாக கருதப்படும் சொற்களும் மலர்ந்தது.
பென்னிஸ்லாவியா மாகாணத்தில் உள்ள கெட்டிஸ்பெர்க் நகரில், உள்நாட்டுப் போரில் உயிரிழந்த 46 ஆயிரம் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. தலைசிறந்த பேச்சாளரும் பார்லிமென்ட் உறுப்பினருமான எட்வார்ட் எவரட் கூட்டத்தின் முக்கிய உரையை மேற்கொள்பவராக இருந்தார். சுமார் 2 மணிநேரம் எட்வரட் எவரட் உரையாற்றினார்.
அவரது நீண்ட... உரைக்குப் பின், அதிபர் லிங்கன்சில நிமிடங்களில் வெறும் 273 வார்த்தைகளைக் கொண்ட சிறு உரையை அளித்தார். அந்த உரை உலகில் ஆற்றப்பட்ட தலைசிறந்த உரைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையின் சாரம் " 87 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட புதிய தேசத்தை கண்டெடுத்தனர். அனைத்து மக்களின் சமத்துவத்தின் லட்சியத்தை கனவாக கொண்டே இந்த தேசமானது உருவாக்கப்பட்டது. மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களாட்சியானது, இறைவனின் திருடியின் கீழ் என்றும் அழியாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்."
மக்களாட்சி குறித்து மேலே கூறப்பட்ட இறுதி வாசகங்களே பின்னர் ஜனநாயகத்தின் எழுதப்படாத விதியாகவும் விளக்கமாகவும் உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மகத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சொற்கள் உதித்த தினம் நவம்பர் 19, 1863. அதன் இன்றைய வயது 155 ஆண்டுகள்!.
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் இந்த உள்நாட்டுப் போரையும், 13வது சட்டதிருத்தத்தையும் எப்படி சாதுர்யமாக கையாண்டார் என்பதை "Lincoln" என்ற திரைப்படமாக எடுத்தார். அது சிறந்த நடிகர் உட்பட பல்வேறு ஆஸ்கார் விருதுகளையும், சர்வதேச விருதகளையும் வாங்கிக் குவித்தது.
வ.கண்ணன், திருச்சி.
உரையின் பின்னணி:
கருப்பின மக்களுக்கான நீதியை மீட்டெடுத்து அடிமை முறையை ஒழித்து, அமெரிக்க அதிபர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகுக்கே ஆதர்ஷமாக விளங்குபவர் லிங்கன். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து வாழ்வில் சோதனைகளையும் துயரங்களையும் மனம் தளராமல் கடந்த உலகின் பழமை வாய்ந்த ஜனநாயக நாட்டின் அதிபராக உச்சம் தொட்டவர் ஆபிரகாம் லிங்கன்.
அமெரிக்காவின் 16வது அதிபராக லிங்கன் பதவி வகித்த காலத்தில்தான் அங்கு, கருப்பின மக்கள் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் போரில் ஈடுபடத் தொடங்கினர். 4 ஆண்டுகளுக்கு மேல் நடந்த போரில் தன் மகன், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் இழந்தபோதும் சளைக்காமல் உழைத்து உள்நாட்டு போருக்குதீர்வு கண்டார் லிங்கன்.
அது மட்டுமின்றி, அமெரிக்க பார்லிமென்ட்டில் 13 வது சட்ட திருத்தத்தின் மூலம் கருப்பின மக்களின் அடிமை நிலையை ஒழித்து புதிய சகாப்தத்தை தொடங்கியவர் லிங்கன். இந்த போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நிகழ்சி கெட்டிஸ்பர்க் நகரில் நடந்தத. அந்த நிகழ்ச்சியில் தான் உலகப்புகழ் பெற்ற அவரது உரையும் மக்களாட்சியின் தத்துவமாக கருதப்படும் சொற்களும் மலர்ந்தது.
பென்னிஸ்லாவியா மாகாணத்தில் உள்ள கெட்டிஸ்பெர்க் நகரில், உள்நாட்டுப் போரில் உயிரிழந்த 46 ஆயிரம் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. தலைசிறந்த பேச்சாளரும் பார்லிமென்ட் உறுப்பினருமான எட்வார்ட் எவரட் கூட்டத்தின் முக்கிய உரையை மேற்கொள்பவராக இருந்தார். சுமார் 2 மணிநேரம் எட்வரட் எவரட் உரையாற்றினார்.
அவரது நீண்ட... உரைக்குப் பின், அதிபர் லிங்கன்சில நிமிடங்களில் வெறும் 273 வார்த்தைகளைக் கொண்ட சிறு உரையை அளித்தார். அந்த உரை உலகில் ஆற்றப்பட்ட தலைசிறந்த உரைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையின் சாரம் " 87 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட புதிய தேசத்தை கண்டெடுத்தனர். அனைத்து மக்களின் சமத்துவத்தின் லட்சியத்தை கனவாக கொண்டே இந்த தேசமானது உருவாக்கப்பட்டது. மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களாட்சியானது, இறைவனின் திருடியின் கீழ் என்றும் அழியாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்."
மக்களாட்சி குறித்து மேலே கூறப்பட்ட இறுதி வாசகங்களே பின்னர் ஜனநாயகத்தின் எழுதப்படாத விதியாகவும் விளக்கமாகவும் உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மகத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சொற்கள் உதித்த தினம் நவம்பர் 19, 1863. அதன் இன்றைய வயது 155 ஆண்டுகள்!.
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் இந்த உள்நாட்டுப் போரையும், 13வது சட்டதிருத்தத்தையும் எப்படி சாதுர்யமாக கையாண்டார் என்பதை "Lincoln" என்ற திரைப்படமாக எடுத்தார். அது சிறந்த நடிகர் உட்பட பல்வேறு ஆஸ்கார் விருதுகளையும், சர்வதேச விருதகளையும் வாங்கிக் குவித்தது.
வ.கண்ணன், திருச்சி.