Saturday, November 10, 2018

செய்தித்துறையிலும் எந்திரன்!


உலகின் முதல் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா நியூஸ் நிறுவனம் சீனாவின் தேடல் இணைதளமான Sogou.com உடன் இனைந்து இதை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் கணிணி ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஆண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தக் கணினி.

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பின்னணி:

நம் அனைவருக்கும் எந்திரன் படம் பார்த்திருப்போம். அதில் வரும் சிட்டி ரோபோ தான் ஆர்டிபிசியல் இன்டலிஜென்சுக்கு எளிமையான உதாரணம். அதாவது மனிதனைப் போலவே செயல்படும் இயந்திரக் கணிணி தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சின் அடிப்படை கூறு. ஒரு பணியை செய்ய மனிதனுக்குத் தேவைப்படுகிற நுண்ணறிவு திறனை செயற்கையாக உருவாக்குவது. இயந்திரத்திற்கு மனிதர்களைப் போல பார்க்கும், சிந்திக்கும், பேசும், முடிவெடுக்கும் திறன்களை தருவதே ஏஐ என்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனிதனுக்கு நிகரான புத்தியுள்ள, அறிவார்ந்த கணினி இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்பதே அறிவியலும் பொறியியலும் இனைந்த இந்த துறையின் நோக்கமாகும். சமீப காலமாக மிகப்பெரும் பாய்ச்சலை மேற்கொண்டு வரும் இந்த துறை தற்போது செய்தித் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது.

முதல் ஏஐ செய்தியாளரின் அம்சங்கள்:

கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகானத்தில் நடந்து வரும் 5 வது உலக இணையதள கருத்தரங்கில் இந்த முதல் ஏஐ செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆண் குரலில் மனிதனுக்குரிய முக பாவனைகளுடன் உண்மை மனிதனை போலவே இந்த செய்தி வாசிக்கும் எந்திரன் செயல்படுகிறார். நேரலை நிகழ்வுகளை ஔிபரப்பில் பார்த்து செய்திகளை தானக வாசிக்கிறார் இந்த எந்திரன். புதிய வரவான எந்திரன் எங்கள் ரிப்போர்டிங் டீமின் உறுப்பிராகிவிட்டார். 365 நாட்களும் 24 மனிநேரமும் செயல்படுகின்ற செய்தியாளர் கிடைத்து விட்டதாக ஜின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது

தொழில் நுட்பங்கள் மனிதனின் கடினமான செயல்களை எளிமையாக்கவே உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றின் எதிர்வினைகளாக பல வம்புகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் போலி செய்திகள் அதிகமாக பரவி வருவது தற்காலத்தில் சர்ச்சைக் குரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது சீனாவில் முதல் செய்தி எந்திரனாக ஒருவர் உதித்துள்ளார். உடனுக்குடன் உண்மைச் செய்திகளை உலகிற்கு உரைப்போம் என்று தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் நாள்தோறும் கூறிவரும் காலத்தில், தற்போது செய்தி வாசிப்பாளரே செயற்கையாக வந்துள்ளார் விந்தை உலகத்தில்.

வ.கண்ணன், திருச்சி.

1 comment:

  1. Super..ஆனால் தனித்துவம் இல்லாமல் போய்விடுமே

    ReplyDelete