தொழில்நுட்பமும், மேற்கத்திய கலாச்சார தாக்கமும் தான் இந்தியாவை குறி வைத்து துல்லிய தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் புதிய பூதாகர வடிவம் தான் டின்டர் என்ற டேட்டிங் ஆப். ஆம், தற்போது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் ஆப் தான் இந்த டின்டர். டில்லி, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே தென்பட்ட இதன் தாக்கம் தற்போது இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெல்ல, மெல்ல உணரப்படுகிறது.
18 வயதுதான் கட்டுப்பாடு:
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போல டின்டரும் ஒரு அப்ளிகேஷன் தான். ஆனால், இது டேட்டிங் ஆப். அதாவது ஆண்கள், பெண்களுக்கு குறிப்பாக இளசுகளுக்கு இடையில் தொடர்பை உருவாக்கி தரும் ஆப் இது. இதை உபயோகிக்க பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும். பெயர், பாலினம் மற்றும் வயதை பதிவு செய்து தங்கள் போட்டோவை(விரும்பினால்)அப்லோட் செய்தால் போதும். 18 வயது நிரம்பியவர்கள் தான் இந்த ஆப்பை உபயோகிக்க முடியும் என்ற ஒரு கட்டுப்பாடு மட்டுமே. பதிவு செய்தவுடன் ஆப்பில் தனியாகவோ அல்லது இன்ஸ்டாகிராம் மூலமாகவோ உங்கள் புரபைலில் போட்டோக்களை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் தான் துணைத் தேடும் படலம் தொடங்குகிறது.
உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொருத்தமான துணையை இந்த ஆப் காட்டிக்கொண்டே போகும். ஸ்கிரீனில் காண்பிக்கப்படும் நபரை பிடித்திருந்தால் வலது பக்கம் ஸ்கிரீனில் ஸ்வைப்(தள்ள)செய்ய வேண்டும். வேண்டாம் என்றால் இடது பக்கம் ஸ்வைப் செய்ய வேண்டும். பின்னர் பிடித்த நபருக்கு லைக் செய்யும் வகையில் இதய வடிவிலான சிம்பலை கிளிக் செய்யலாம். உடனே எதிர் நபருக்கு மெசேஜ் போகும். அவருக்கும் பிடித்திருப்பதாக ஸ்வைப் செய்தால் உடனே அவரை மெஸேஜ் மூலம் தொடர்பு கொள்ளலாம். பின்னர் சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங் முடித்து வைக்கிறது இந்த ஆப். அருகில் இருக்கும் நபரை தேர்வு செய்து காட்டுவதால் நேரடியாக தொடர்புகொண்டு பழக இந்த ஆப் வழிசெய்கிறது. ஆனால், இந்த அப்ளிகேஷனால் சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதால் இளைஞர், இளைஞிகள் கொஞ்சம் உஷாராகதான் இருக்கணும்.
வ.கண்ணன்.
No comments:
Post a Comment