கடந்த மார்ச் மாதம் இந்த நுாற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாகின்ஸ் மரணம் அடைந்தார். இயற்பியல் மற்றும் வானியல் தொடர்பான துறைகளில் வியத்தகு ஆய்வுகளை செய்து காட்டிய அவரின் கடைசி புத்தகம் கடந்த தற்போது வெளியாகியுள்ளது.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து அறிவியல் ஆய்வாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதே அந்த புத்தகம். Brief Answer to The Big Questions, அதாவது பெரிய கேள்விகளுக்கு சுருக்கமான பதில்கள் என்ற தலைப்பில் அது வெளியாகியுள்ளது. உலகில் அனைவராலும் கேட்டு விவாதிக்கப்பட்ட 10 முக்கிய கேள்விகளுக்கான பதில்களை அதில் ஹாகின்ஸ் தெரிவித்துள்ளார்.
10 கேள்விகள்:
1)கடவுள் இருக்கிறாரா?
2)பிரபஞ்ச தொடக்கம் எவ்வாறு இருந்திருக்கும்?
3)எதிர்காலத்தை கணிக்க முடியுமா?
4)கால பிரயானம் சாத்தியமா?
5)வேற்று கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது சாத்தியமா?
6)பிளாக் ஹோல்(Black Hole) க்குள் இருபது என்ன?
7)இந்த உலகத்தை அழிவிலிருந்து தடுக்க முடியுமா?
8)வேற்று கிரகவாசிகள் உள்ளனரா?
9)ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மனிதர்களை பாதிக்குமா?
10) புவியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
மேற்கண்ட முக்கிய கேள்விகளுக்கு ஹாகின்ஸ் தனது அறிவியல் பார்வை மூலம் தனது கடைசி புத்தகத்தில் பதிலளித்துள்ளார். எதிர்காலத்தில் கணிப்பொறி இயந்திரம் மனிதர்களை விட (Artificial Intelligence மூலம்)அறிவு வளர்ச்சி பெற்று மனிதர்களையே ஆதிக்கம் செய்யும். மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி வேற்று கிரகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற அதிர்ச்சி தரும் பதில்கள் மற்றும் விளக்கத்துடன் தற்போது வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ள அந்த புத்தகம்.